ஆன்மிகம்
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்

Published On 2019-04-19 05:26 GMT   |   Update On 2019-04-19 05:26 GMT
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தேரில் சுவாமி எழுந்தருளினார். மதியம் 3.33 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூவராயன்பாளையம், வால்மாழ்பாளையம், ஈச்சம்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில், திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.டி.சி.சேரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கவுண்டம்பட்டி ஆர்.செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.அன்புசெல்வம், ஈச்சம்பட்டி அ.தி.மு.க. பிரமுகர் பி.தியாகராஜன், ஸ்ரீநம்பியப்பா திருமண மண்டப உரிமையாளர் டி.செல்வம், ஸ்ரீதிருமலை இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் பி.சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பாக அன்னதானம் மற்றும் நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருப்பைஞ்சீலி ஊராட்சி செயலாளர் பி.சிவலிங்கம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள், பணியாளர்கள், செய்து இருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகாரம் விழாவும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News