ஆன்மிகம்
சங்கரன்கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

சங்கரன்கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2020-07-24 08:36 GMT   |   Update On 2020-07-24 08:36 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் தினமும் காலை 8.30 மணி, மாலை 5.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று காலை கோமதிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் கணேசன் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை வருகிற 2-ந் தேதி வரை பக்தர்களும் காணும் வகையில் சங்கர நாராயண சுவாமி கோவில் யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பபடுகிறது.

Similar News