ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை நாளை நடக்கிறது
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது.
கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அர்ச்சகர்கள் ஏகாந்தமாக நடத்துகின்றனர்.
கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அர்ச்சகர்கள் ஏகாந்தமாக நடத்துகின்றனர்.