ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று ஆடி 18-ம் பெருக்கு விழா
- ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்று ஆடி 18-ம் பெருக்கு விழா. சகல நதி ஓரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தா வனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - நன்மை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - வெற்றி
கடகம் - சுகம்
சிம்மம் - உயர்வு
கன்னி - பாராட்டு
துலாம் - குழப்பம்
விருச்சிகம் - பிரமிப்பு
தனுசு - விவேகம்
மகரம் - அமைதி
கும்பம் - அன்பு
மீனம் - ஆதரவு
நாளைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-18 (வியாழக்கிழமை)
பிறை :தேய்பிறை
திதி :துவிதியை இரவு 8.14 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் :அவிட்டம் நண்பகல் 1.51 மணி வரை பிறகு சதயம்
யோகம் :சித்த, மரணயோகம்
ராகுகாலம் :நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் :காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திராஷ்டமம்: பூசம்- ஆயில்யம்
மேல்நோக்கு நாள்