வழிபாடு
- முருகன் மாம்பழத்தை கையில் ஏந்தியபடி அருள்கிறார்.
- பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.
* விராலிமலை மூலவரான சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.
* கனககிரி என்ற திருத்தலத்தில் கிளியை கையில் ஏந்தியபடி முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அதே போல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாம்பழத்தை கையில் ஏந்தியபடி அருள்கிறார்.
* திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார்.