வழிபாடு

பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை நடக்கிறது

Published On 2022-07-27 07:44 GMT   |   Update On 2022-07-27 07:44 GMT
  • இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.
  • ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி அம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சரபசூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்கின்றனர்.

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News