வழிபாடு

8-ந்தேதி சந்திர கிரகணம்: பண்ணாரி அம்மன் கோவிலில் 6½ மணி நேரம் நடை அடைப்பு

Published On 2022-11-05 08:46 GMT   |   Update On 2022-11-05 08:46 GMT
  • ஈரோட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில்.
  • விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்படும். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூ்ா, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு தினமும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 8-ந் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை 6½ மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும்.

எனவே அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News