வழிபாடு

பெருவிளைதெய்வி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-10-20 06:20 GMT   |   Update On 2022-10-20 06:20 GMT
  • இந்த விழா 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
  • 31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது

நாகர்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முதல்நாள் சிறுவர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட்டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பாலமுருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது. 26-ந்ேததி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப்போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார்.

29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகியவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ராஜமன்னார் தலைமையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப்படுகிறது.

31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ்ராம அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு மணிகோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவேலன், கவுரவத்தலைவர் அருள்குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News