வழிபாடு

சோலைமலை முருகன் கோவிலில் நாளை பங்குனி உத்திர விழா

Published On 2023-04-03 08:08 GMT   |   Update On 2023-04-03 08:08 GMT
  • குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
  • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும்.

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலை மலை முருகன் கோவிலும் ஒன்றாகும். மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 4-ந் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு எடுத்து செல்வார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள் நடைபெறும். குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News