வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-03-05 01:30 GMT   |   Update On 2024-03-05 01:30 GMT
  • ராமேசுவரம் சுவாமி, அம்பாள் யானை வாகனத்தில் பவனி.
  • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 22 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி பின்னிரவு 2.01 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: மூலம் காலை 11.40 மணி வரை பிறகு பூராடம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று வாஸ்து நாள் (காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமேசுவரம் சுவாமி, அம்பாள் யானை வாகனத்தில் பவனி. ஸ்ரீகாளஹஸ்தி, திருக்கோர்ணம் கோவில்களில் சிவபெருமான் புறப்பாடு. காரிய நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்த கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-முயற்சி

ரிஷபம்-நன்மை

மிதுனம்-ஜெயம்

கடகம்-யோகம்

சிம்மம்-சாந்தம்

கன்னி-ஓய்வு

துலாம்- பக்தி

விருச்சிகம்-நட்பு

தனுசு- நன்மை

மகரம்-நலம்

கும்பம்-சாதனை

மீனம்-உதவி

Tags:    

Similar News