வழிபாடு
திருமலையில் கார்த்திகை மாத மகாவிஷ்ணு பூஜைகள் வருகிற 4-ந்தேதி தொடக்கம்
- 5-ந்தேதி கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை நடக்கிறது.
- 11-ந்தேதி கோபூஜை நடக்கிறது.
தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் கார்த்திகை மாத மகாவிஷ்ணு பூஜைகளை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கடைப்பிடிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த மகா விஷ்ணு பூஜைகள் வைகானச ஆகம சாஸ்திரப்படி நடக்கிறது.
அதில் நவம்பர் 4-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை விஷ்ணு சாளக்ராம பூஜை, 5-ந்தேதி மாலை 3 மணியில் இருந்து மாலை 4:30 மணி வரை கைசிக துவாதசி துளசி-தாமோதர பூஜை, 11-ந்தேதி காலை 8:30 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோபூஜை ஆகியவை அடங்கும்.
21-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை தன்வந்திரி ஜெயந்தி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.