- அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை
- திருவண்ணாமலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.
இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும்.
அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும்.
யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும், நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும்.
வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும்.
வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும்.
குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும்.
ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.