ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- பெருமாளை வழிபட உகந்த நாள்.
- வீரவநல்லுர் பூமிநாதர் தெப்பல் உற்சவம்.
இன்று சுபமுகூர்த்த தினம். சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வீரவநல்லுர் பூமிநாதர் தெப்பல் உற்சவம். திருத்தங்கல் ஸ்ரீ அப்பன் சிறிய திருவடிகளிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி. சொக்கலிங்கபுதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம். திருக்கல்யாணம், திருப்பொற்றாழி வழங்கும் விழா. திருவல்லிக்கேணி பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குரு பகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆனி-14 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 11.32 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சுவாதி நண்பகல் 1.47 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-பெருமை
மிதுனம்-சுபம்
கடகம்-உயர்வு
சிம்மம்-தெளிவு
கன்னி-இரக்கம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- ஆர்வம்
மகரம்-நலம்
கும்பம்-நிறைவு
மீனம்-புகழ்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional