வழிபாடு

விநாயக சதுர்த்தியன்று 21 வகை இலை பூஜை பலன்கள்

Published On 2022-08-30 07:53 GMT   |   Update On 2022-08-30 07:53 GMT
  • நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
  • 21 வகையான இலைகளால் அர்ச்சித்தால் கிடைக்கும் பலாபலன்கள் பின்வருமாறு:

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகனை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து எடுத்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1.முல்லை இலை பலன்:- அறம் வளரும்

2.கரிசலாங்கண்ணி இலை பலன்:- இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.வில்வம் இலை பலன்:- இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல் பலன்:- அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேஷ மானது.

5.இலந்தை இலை பலன்:- கல்வியில் மேன்மையை அடையலாம்.

6.ஊமத்தை இலை பலன்:- பெருந்தன்மை கைவரப்பெறும்.

7.வன்னி இலை பலன்:- பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9.கண்டங்கத்தரி பலன்:- வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10.அரளி இலை பலன்:- எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11.எருக்கம் இலை பலன்: -கருவில்உள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

12.மருதம் இலை பலன்:- மகப்பேறு கிட்டும்.

13.விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணறிவு கைவரப்பெறும்.

14.மாதுளை இலை பலன்:- பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15.தேவதாரு இலை பலன்:- எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16.மருக்கொழுந்து இலை பலன்:- இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்:- உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை பலன்:- சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20.அகத்தி இலை பலன்:- கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்:- நல்ல கணவன்- மனைவி அமையப்பெறும்.

Tags:    

Similar News