கால்பந்து
null

யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

Published On 2024-07-11 01:54 GMT   |   Update On 2024-07-11 02:03 GMT
  • இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
  • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.

 


முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

Tags:    

Similar News