கால்பந்து

யூரோ கோப்பை: பரபரக்கும் அரையிறுதி சுற்று நாளை தொடக்கம்

Published On 2024-07-09 03:02 GMT   |   Update On 2024-07-09 03:02 GMT
  • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
  • லீக் போட்டிகளில் வென்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி போட்டி நாளை (ஜூலை 10) துவங்குகிறது. அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Tags:    

Similar News