பொது மருத்துவம்

'டி-ஹைட்ரேஷன்' எனும் நீரிழப்பால் ஏற்படும் பாதிப்பு

Published On 2024-10-11 07:44 GMT   |   Update On 2024-10-11 07:44 GMT
  • உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது.
  • நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.

நமது உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றமே நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும்போதும், உடல் நலமற்று இருக்கும்போதும், அதிக வெப்பநிலை காரணமாக நீர் உட்கொள்ளலை மீறும் போதும் நீர்ப்போக்கு ஏற்படுகிறது.

மனிதர்கள் உடலில் உள்ள மொத்த நீரில் 3 முதல் 4 சதவீதம் நீர் குறையும்போது ஏற்படுகிற உடல் பாதிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியும். அது 5 முதல் 8 சதவீதமாக உயரும்போது உடல் சோர்வையும் தலைச்சுற்றலையும் ஏற்படுத்தும். மொத்த உடல் நீரில் 10 சதவீதத்துக்கும் மேலாக நீர் இழப்பு ஏற்படுகிறபோது கடுமையான தாகத்துடன் உடலும் மனமும் பலவீனம் அடைந்து கீழே சரிந்து விழுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது. நீரிழப்பு பாதிப்பால் ரத்தத்தில் சோடியம் அயனிகளின் அளவு அதிகமாகி, ரத்த பிளாஸ்மா குறைகிறது. இதுவே, உடலை சோர்வாக்கி, கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே குழந்தைகளே பெற்றோர்களே தண்ணீர் குடியுங்கள். உங்கள் உடலில் உள்ள தண்ணீர் அளவு குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.

வீட்டு வாசல்களில் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கமுறையை உங்கள் வீடுகளில் செயல்படுத்துங்கள். தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

Tags:    

Similar News