பொது மருத்துவம்
null

நான்-ஸ்டிக் உபயோகிக்காதீங்க... வீட்டில் செய்யும் உணவில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

Published On 2024-05-29 06:22 GMT   |   Update On 2024-05-29 08:06 GMT
  • காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை.
  • கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நாம் அன்றாட வாழ்வில் இப்போது இருக்கும் வேலை பளுவால் ஈஸியா என்ன சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிட தொடங்கிவிட்டோம். ஆனால் அப்படி அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதால் நமக்கு சுவை என்னமோ நல்லாதான் இருக்கும்.. ஆனால் உடலுக்கு அத்தனையும் கேடு விளைவிப்பதாக இருக்கிறது.

இதனால் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உப்பு சார்ந்த நோய்கள் இப்போ அதிகபடியாக பெருகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், கேன்சர் என பல்வேறு விதமாக உடல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.

சரி ஹோட்டல்ல சாப்பிட்டா தான் இப்படி ஏகப்பட்ட நோய்கள் வருது.. அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவோம் என்று கிளம்பினாலும் இப்படிதான் ஆகிறது.


ஆமாம்... நாம் எந்த அளவுக்கு எண்ணெய், உப்பு, சர்க்கரை என அதிக சுவையூட்டும் உணவுகளை எடுத்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் நோய்களுடன் வாழ்கிறோம் என்று தான் அர்த்தம்.

இப்போதெல்லாம் சிறு வயதிலேயே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. இதை ஐசிஎம்ஆர், என்ஐஎன் ஆகிய சுகாதார அமைப்புகள் உணவின் வழிகாட்டி என்ற கருத்துகணிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.

நாம் அன்றாடம் வேக வைத்த காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள் நாம் எடுத்து கொள்வதால் உடல் சார்ந்த நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.


நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடலுக்கு அதிக பாதிப்புக்களை தருகிறது. கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.

இது போன்ற உணவு பழக்கங்களில் இருந்து நாம் எப்படி மாறுவது என்றால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்சட்டி சமையல் முறையில் சமைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது உடலுக்கு கிடைக்கிறது.


காய்கறிகளை முழுவதுமாக வேக வைப்பதால் அதில் உள்ள வைட்டமின்கள் நமக்கு முழுவதும் கிடைப்பதில்லை. ஆதலால் அரைபதம் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

நமக்கு வரும் நோய்களுக்கு நாம் தான் காரணமாக இருக்கிறோம். நமது சந்ததியும் இதையே பின்பற்றுவதால் அவர்களுக்கும் சிறு வயதிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன. ஆகவே நமது அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது தமது கையில் தான் உள்ளது. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மகத்துவத்தை அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூற நாம் கடமைபட்டிருக்கிறோம்.

Tags:    

Similar News