உள்ளூர் செய்திகள் (District)

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 91 வழக்குகளில் 108 பேர் கைது

Published On 2023-04-02 07:42 GMT   |   Update On 2023-04-02 07:42 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 91 வழக்குகளில் 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்துதல். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மதுபானங்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக் போன்ற போதை புகையிலைப் பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி வேட்டை நேற்று நடைபெற்றது. இதில் மது வழக்குகள் 63 பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 12 பேர் மீது குட்கா வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்ப ற்றப்பட்டது. இதேபோல 5 பேர் கஞ்சா வழங்கில் கைது செய்யப்பட்டு 380 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தவிர 26 நபர்கள் சூதாட்ட வழக்கிலும், 2 பேர் லாட்டரி விற்பனை வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம், 91 வழக்குகளில் 108 பேர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News