உள்ளூர் செய்திகள் (District)

திருட்டு நடந்த செவிலியர் விஜயலட்சுமி வீட்டை படத்தில் காணலாம்.

பரமத்திவேலூர் அருகே செவிலியர் வீட்டில் பீரோ உடைத்து 15 பவுன், ரூ.10 ஆயிரம் திருட்டு

Published On 2022-12-22 07:36 GMT   |   Update On 2022-12-22 07:36 GMT
  • சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினர்.
  • அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பரமத்திவேலூர்:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாலப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயலட்சுமி உடனடியாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News