உள்ளூர் செய்திகள்

போதை பொருட்கள் விற்பனை செய்த 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்-மா.சுப்பிரமணியம்

Published On 2024-08-11 07:01 GMT   |   Update On 2024-08-11 07:01 GMT
  • குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனை

ஈரோடு:

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலின் போது தன்னார்வ அமைப்பு நிறுவனங்கள் புற்றுநோய் தாக்கம் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.

ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்ப தால் புற்றுநோய் கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுத்தது. இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

13 ஆயிரத்து 89 பேருக்கு சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 3 ஆயிரத்து 39 பேர் சோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியப்படி 14 இடங்களில் கட்டண படுக்கை அறை திறந்து வைக்க உள்ளோம். இதில் குளிர்சாதன வசதி, கழிவறை, டி.வி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்ட த்திற்கு எதிராக எடுக்க ப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இரு ப்பது கண்டறியப்பட்டது.

அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதை பொரு ட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பத்தாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவதுமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் போதை பொட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News