சொத்து தகராறில் டாக்டரை தாக்கிய 2 பேர் கைது
- மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.
- மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே அக்ரஹாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கங்கதார் (வயது28). டாக்டரான இவர் அதே பகுதியில் தனியார் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் மாதேஸ் (31). இவருக்கும் அவரது சகோதாரர் சீனிவாசன் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கங்கதார் மற்றும் கிராம மக்கள் இருதருப்பினரையும் சமதானம் செய்து வைத்தனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் மாதேஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஹரீஸ் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாக்டர் கங்காதரை ஆபாசமாக திட்டி ஹெல்மெட்டால் தாக்கினார்.
இதுகுறித்து அவர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஸ் மற்றும் அவரது உறவினர் ஹரீஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.