உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டிய மழை: கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2024-10-25 04:30 GMT   |   Update On 2024-10-25 04:30 GMT
  • வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
  • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஊட்டி:

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. மதியம் ஒரு மணிக்கு தொட ங்கிய மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டியில் சவுத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஒரு சில வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. பஸ்நிலையம் அருகே ரெயில்வே பாலம் உள்பட பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல இருந்தவர்களும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகளும் அவதி அடைந்தனர்.

புறநகர் பகுதியில் பெய்த மழையால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கிநின்றது. குன்னூரில் லேசான மழை பெய்தது. மாவட்டத்தில் குளிர் நிலவி வரும் நிலையில் நேற்று பெய்த மழையால் கடும் குளிர் ஆனது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News