உள்ளூர் செய்திகள் (District)

போடியில் கனமழைக்கு இடிந்த வீடுகளை படத்தில் காணலாம்.


போடியில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்

Published On 2023-11-23 05:35 GMT   |   Update On 2023-11-23 05:35 GMT
  • போடியில் பெய்த கனமழைக்கு மூதாட்டியின் வீடு உள்பட 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
  • பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிலமலை நடுத்தெரு பகுதியில் சரஸ்வதி(50) என்பவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இவரது வீடு ஏற்கனவே பலம் இழந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக சரஸ்வதிக்கு எந்த காயமும் ஏற்படடவில்ைல. இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது.

இதேபோல் போடி யை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News