உள்ளூர் செய்திகள் (District)

தளி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் சாவு

Published On 2023-02-15 09:39 GMT   |   Update On 2023-02-15 09:39 GMT
  • அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.
  • இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி, 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அசோக் (வயது 32). இவரது நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் (20). இருவரும் தனியார் நிறுவன தொழிலாளிகள்.

நேற்று தங்களது புல்லட்டில் தளி-ஓசூர் சாலையில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று அசோக், விஜய் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அசோக்கின் தந்தை நாகப்பா கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News