உள்ளூர் செய்திகள் (District)

நீலகிரி மாவட்டம் உருவாகி 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நடந்த நீலகிரி நடைபயணத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published On 2023-05-08 10:00 GMT   |   Update On 2023-05-08 10:00 GMT
  • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்- எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தனர்
  • மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறுஅமைப்பினர், அரசு துறையினர் கலந்து கொண்டனர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் உருவாகி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற நீலகிரி நடைபயணம் 2023-ஐ சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி அருகில் தொடங்கிய நடை பயணம் பிங்கர் போஸ்ட் , ஹில்பங்க்,மாவட்ட கலெக்டர் அலுவலக ம்,சேரி்ங்கிராஸ் வழியாக எச்.ஏ.டி.பி மைதானத்தில் முடிவடைந்தது

இதில் வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சிணி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகரட்சி தலைவர் வாணிஸ்வரி, துணை தலைவரும், திமுக மாவட்ட துணை செயலாளருமான ரவிக்குமார், தி.மு.க. பொறியாளர் அணி மாநில துணை செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளருமான பரமேஸ்குமார் உள்ளிட்டவரகள் கலந்து கொண்டனர்

இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறுஅமைப்பினர், அரசு துறையினர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News