செய்திகள் (Tamil News)

மதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-10 10:29 GMT   |   Update On 2018-05-10 10:29 GMT
மதுரை அருகே பாலமேட்டில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு ராம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 50). இவரது மனைவி சுசிலா (45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்த அவர்கள், அதில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய மகேஸ்வரன் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (42). இவரின் பெற்றோர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News