உலகம் (World)

அழகான கவர்னர் என அழைக்கப்பட்டவர் ஊழியர்களுடன் தகாத உறவு, ஊழல் வழக்கில் கைது

Published On 2024-09-21 05:16 GMT   |   Update On 2024-09-21 05:16 GMT
  • கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது.
  • 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவில் பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கைதான ஜாங் யாங், தனது தோற்றத்திற்காக "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்றார். கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) ஆளுநராகவும் துணை செயலாளராகவும் பணியாற்றினார். இந்நிலையில், அவர் உடன் பணிபுரியும் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

52 வயதான அவர் 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதியில் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) துணை பதவிக்கு உயர்ந்தார். விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்ததால் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு ஆதரவாக தனது சொந்த பணத்தை செலவழித்தார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது. அதில் ஜாங் லஞ்சம் பெற்றதாகவும், தனது விருப்பமான நிறுவனங்களை தனது பதவியைப் பயன்படுத்தை லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறப்பட்டடது. மேலும் தன்னுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

மேலும், 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரால் பெற்ற பலன் காரணமாக சிலர் அவரது காதலராகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது, மற்றவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு பயந்து தயக்கத்துடன் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News