செய்திகள்

மர்ம காய்ச்சலால் மாணவ-மாணவிகள் பாதிப்பு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2018-06-19 08:20 GMT   |   Update On 2018-06-19 08:20 GMT
காரியாபட்டி அருகே மர்ம காய்ச்சலால் மாணவ-மாணவிகள் பாதிப்படைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே உள்ளது அரசகுளம் கிராமம் இங்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு முழுவதும் அடுத்தடுத்து காய்ச்சல் வந்து விடுகிறது. அரச குளம் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரியாபட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போன்று சொக்கனேந்தல் கிராமத்திலும் காய்ச்சல் பரவி வருவதாகவும் அந்த கிராம மக்களும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமங்களில் கிராம மக்கள் முழுவதற்கும் காய்ச்சல் பரவுவதற்கு என்ன காரணம் என்று சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News