இந்தியா

ஜாக்கெட், பிராவை கழற்றி... ஒடிசா காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு நடந்த வன்கொடுமை

Published On 2024-09-20 04:37 GMT   |   Update On 2024-09-20 04:37 GMT
  • என்னுடைய ஜாக்கெட்டை கழற்றினர். ஜாக்கெட்டால் என்னுடைய இரண்டு கைகளையும் கட்டினர்.
  • ஒரு ஆண் அதிகாரி என்னுடைய மேல் உள்ளாடையை கழற்றிய பிறகு அவர் தொடர்ந்து எனது மார்பில் உதைத்தார்.

ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டது, மற்றும் அதிகாரியின் வருங்கால மனைவி வன்கொடுமைக்கு ஆளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ரெஸ்டாரன்ட் ஒன்று நடத்தி வருகிறார். செப்டம்பர் 15-ந்தேதி இரவு நேரம் இவரது கடைக்கு சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது இவருடன் தகராறு செய்துள்ளனர். தகராறு எல்லை மீற அதிகாரியின் வருங்கால மனைவி காவல் பரத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார்.

பரத்பூர் காவல் நிலையத்திற்கு தான் சென்றதும், அங்கு தனக்கு எதிராக நிகழ்ந்த வன்கொடுமை குறித்தும் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி கூறியதாவது:-

இளைஞர்கள் கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்து, புகார் அளிப்பதற்காக பரத்புர் காவல் நிலையம் சென்றேன். வரவேற்பு பகுதியில் பெண் போலீஸ் ஒருவர் மட்டும் அமர்ந்து இருந்தார். வேறு யாரும் காவல் நிலையத்தில் இல்லை. வெளியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தன்னை எந்த நேரத்திலும் பின்தொடர்ந்து வரலாம். இதனால் வழக்குப்பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளித்தால் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன். எனினும், வழக்குப்பதிவு செய்வதற்குப் பதிலாக அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.

நான் வழக்கறிஞர் என்று கூறியபோதிலும், அந்த பெண் போலீஸ் கடுமையாக கோபம் அடைந்து தவறாக நடந்து கொண்டார்.

அந்த நேரத்தில் பாதுகாப்பு வாகனத்தில் பெண் போலீசார் உள்பட பல போலீசார் அந்த காவல் நிலையத்திற்கு வந்தனர். வந்ததும் இரண்டு பெண் காவலர்கள் என்னுடைய முடியை பிடித்து இழுத்து அடிக்க தொடங்கினர். அடிப்பதை நிறுத்துங்கள் என அவர்களிடம் கெஞ்சினேன். அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் என்னை இழுத்துச் சென்றார்கள்.

அவர்களில் ஒருவர் என் கழுத்தை நெரிக்க தொடங்கினார். நான் அவரது கையை கடித்தேன். அவர்கள் என்னுடைய ஜாக்கெட்டை கழற்றினர். ஜாக்கெட்டால் என்னுடைய இரண்டு கைகளையும் கட்டினர். அதன்பின் என்னுடைய இரண்டு கால்களையும் கட்டி, ஒரு அறைக்கும் வீசினர்.

பின்னர் ஒரு ஆண் அதிகாரி வந்தார். என்னுடைய மேல் உள்ளாடையை கழற்றிய பிறகு அவர் தொடர்ந்து எனது மார்பில் உதைத்தார். பின்னர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்கர் வந்தார். அவர் அவரது பேன்ட் ஜிப்பை கழற்றி, அவரது ஆணுப்பை காட்டியதுடன், நான் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால்... என கேலி செய்தார். மேலும் எனக்கு எதிராக பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டார்.

இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.

இந்த விவகாரம் வெளியே கசிய ஒடிசா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநில டிஜிபி-யிடம் இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

காயம் அடைந்த அந்த பெண் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தங்களை தாக்கியதாக போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். ஒடிசா உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர். அந்த பெண் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 26-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags:    

Similar News