செய்திகள் (Tamil News)

ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளை

Published On 2018-07-30 07:28 GMT   |   Update On 2018-07-30 07:28 GMT
ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Robberycase

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே பாலப்பன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சேவை மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக வந்து செல்கின்றனர்.

சம்பவத்தன்று வேலை நேரம் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த 2 கணினி, உதிரி பாகங்கள் மின் மோட்டார் கம்பிகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து செயல் அலுவலர் செல்வம் அளித்த புகாரின் பேரில் கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News