செய்திகள் (Tamil News)

மலிவு விலையில் தங்க காசு தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி- பெண் மீது போலீசில் புகார்

Published On 2018-07-31 07:33 GMT   |   Update On 2018-07-31 07:33 GMT
சென்னையில் மலிவு விலையில் தங்க காசு தருவதாக கூறி ரூ.14½ லட்சம் மோசடி செய்ததால பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஜய குமார். இவர், உறவினர்கள் லாவண்யா, உஷா, இந்திரா காந்தி ஆகியோருடன் அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

நான் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறேன். கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 2017-ம் ஆண்டு மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவியான மேனகா (30) மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது எனக்கு அறிமுகமானார்.

அவர் என்னிடம், “வெளிநாடுகளில் இருந்து தனக்கு தங்க காசுகள் அடிக்கடி வரும். அதை கிராம் ரூ.500-க்கு தருகிறேன் என்று கூறினார்.

இதை நம்பி நானும் என்னுடைய உறவினர்களான இந்திராகாந்தி, உஷா, லாவண்யா ஆகிய நால்வரும் சேர்ந்து சுமார் 14 லட்சத்து 50ஆயிரம் ரூபாயை கடந்த வருடம் நவம்பர் மாதம் மேனகாவிடம் கொடுத்தோம்.

ஆனால் இதுவரை சொன்னபடி தங்க காசும் தரவில்லை எங்கள் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ண களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News