செய்திகள் (Tamil News)

பாகூரில் தற்கொலை மிரட்டல் விடுத்து போலீசை திணறடிக்கும் வாலிபர்

Published On 2018-08-23 16:59 GMT   |   Update On 2018-08-23 16:59 GMT
பாகூரில் அடிக்கடி வீண் தகராறு செய்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாலிபர் மிரட்டுவதால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

பாகூர்:

பாகூர் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் அடிக்கடி வீண் தகராறு செய்து அவர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போது சுவற்றில் மோதிக் கொண்டும், போலீஸ் நிலையத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பிரபு மிரட்டி வந்ததால் அவரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்து வந்தனர்.

அது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேலு (45). என்பவரிடம் பிரபு வீண் தகராறு செய்து அவரை கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயவேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார்.

ஆனால், போலீசார் வழக்குபதிவு செய்தும் பிரபுவை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்தால் போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரபு மிரட்டுவதால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் தவி(ர்)த்து வருகிறார்கள்.

Tags:    

Similar News