செய்திகள் (Tamil News)

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு

Published On 2018-10-20 05:38 GMT   |   Update On 2018-10-20 05:38 GMT
வேலூர் பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி இன்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.

ஆண்கள் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர். சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News