இந்தியா (National)

குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த தாய் - விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Published On 2024-09-21 10:30 GMT   |   Update On 2024-09-21 10:30 GMT
  • ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
  • குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

Similar News