செய்திகள்

மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 13½ லட்சம் மோசடி- அரசு பஸ் கண்டக்டர் கைது

Published On 2018-12-05 11:37 GMT   |   Update On 2018-12-05 11:37 GMT
மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 13½ லட்சம் மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 41). அரசு பஸ் டிரைவராக உள்ள இவர் அண்ணாநகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை கரிசல்குளம் திருமால்நகரை சேர்ந்த கணபதி (48) என்பவர் அரசு கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் உறவினர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பி கணபதியிடம் ரூ. 13½ லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது கணபதி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News