செய்திகள்
பட்டாசு

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள்

Published On 2021-11-03 08:35 GMT   |   Update On 2021-11-03 08:35 GMT
குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொது மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.

வரும் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பேணி காப்பது நமது கடமையும் பொறுப்புமாகும். அதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுதல் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களின்அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே சுற்றுச் சூழலுக்கு ஏற்ப அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News