உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே குட்கா விற்பனை செய்த 26 கடைகளுக்கு சீல்

Published On 2024-06-22 05:55 GMT   |   Update On 2024-06-22 05:55 GMT
  • 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
  • குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஊத்தங்கரையில் 6 கடைகளும், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்தூர் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு, மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு சீல் வைத்தனர்.

மேலும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News