புதுச்சேரி
null

புதுச்சேரியில் 3-ம் நபர் காப்பீடு இல்லாத வாகன ஓட்டிகளுக்கு 3 மாதம் ஜெயில்

Published On 2024-05-14 04:17 GMT   |   Update On 2024-05-14 04:19 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு போக்கு வரத்துத்துறை துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத 3-ம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் 3-ம் நபர் காப்பீடு இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இது சட்டத்திற்கு முரண்பாடானது.

எனவே 3-ம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 196-ன் படி அபராதம் விதிக்கவேண்டும். அதாவது முதல் முறை குற்றத்திற்கு ரூ.2 ஆயிரம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும், குற்றம் தொடர்ந்தால் ரூ.4 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News