உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2022-10-27 07:57 GMT   |   Update On 2022-10-27 07:57 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்.
  • சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 78 கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் அமுதவல்லி (வயது 20) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நூல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி வீட்டுக்கு வந்த அவர் 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசில் அமுத வள்ளியின் அண்ணன் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதவல்லியை தேடி வருகின்றனர்.

அதேபோல் உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசித்து வருபவர் கேசவன் (44). இவருடைய மகள் ரஞ்சனி (21) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசில் கேசவன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் செல்வம் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் பிளஸ்-2 படித்து வரும் சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில், சிறுமியின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள் 3பேர் மாயமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News