உள்ளூர் செய்திகள் (District)

கைதுசெய்யபட்டவர்கள்.

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2023-05-27 09:33 GMT   |   Update On 2023-05-27 09:33 GMT
  • மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,
  • பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, கே புதூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் 4 பேர் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,

போலீசாரின் விசாரணையில் அவர்கள் 4 பேரும் கே.புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதியழகன், கோவிந்தசாமி மற்றும் குமார் என்பது தெரியவந்தது, அவர்களிடமிருந்து பணம் 520 ரூபாய், சீட்டு கட்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Tags:    

Similar News