மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் சாவு
- ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
- ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தாரமங்கலம்,:
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார், நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஆடுகளை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார், பிறகு அதிகாலை நான்கு மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெள்ளைய கவுண்டர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார், அப்போது ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உறவினர்களை அழைத்து பார்த்த போது ஏற்கனவே நான்கு ஆடுகள் இறந்து விட்ட நிலையில் மூன்று ஆடுகள் பலத்த காயங் களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை காப்பாற்ற வேண்டி அமரகுந்தி அரசு கால்நடை மருத்துவர்களுக்கு கொடுத்த தகவளின் படி சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர், சம்பவம் குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.