உள்ளூர் செய்திகள் (District)
இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது
- சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது.
- உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே வணங்கானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (வயது32). கொத்தனார். இவர் சாத்தனூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிக்காக ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 8 இரும்பு தகடுகளை வாங்கி வைத்திருந்தார். சம்பவத்தன்று அந்த இரும்பு தகடுகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அவர் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21), அருண் (23), மாது (19), சசிக்குமார் (22) ஆகியோர் இரும்புதகடுகளை திருடியது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.