உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

தேவதானப்பட்டி அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை

Published On 2023-11-08 05:54 GMT   |   Update On 2023-11-08 05:54 GMT
  • வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அமர்மேக்தே (24). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னவேலு மகன் காவியா (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ த்தன்று பள்ளிக்கு செல்ல வில்லை. யாருடனும் பேசா மல் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் மணி மனைவி அய்யம்மாள் (வயது45). கடன் தொல்லை யால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கிய அய்ய ம்மாளை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேனி அல்லிநகரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (35). பெற்றோரை இழந்ததால் சற்று மனநிைல பாதிக்கப்பட்டார். அவரது உறவினர் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து பரா மரித்து வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்னர்.

Tags:    

Similar News