உள்ளூர் செய்திகள் (District)

சீமான் தங்கியுள்ள ஓட்டல் முன்பாக போலீஸ் குவிப்பு: நா.த.க. நிர்வாகிகள் வாக்குவாதம்- பரபரப்பு

Published On 2024-10-21 06:20 GMT   |   Update On 2024-10-21 06:26 GMT
  • வெண்ணமலையில் பொதுமக்களை சீமான் சந்திக்க இருக்கிறார்.
  • சீமான் தங்கியிருக்கும் ஓட்டல் முன் போலீசார் குவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம்.

வெண்ணமலை கோவில் நில பிரச்சனை சம்பந்தமாக மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். இதற்கான கரூர் சென்ற அவர் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த ஓட்டல் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களை சீமான் சந்திப்பதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த தகவல் அறிந்ததும் சீமான் தங்கியுள்ள ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். சீமானை இவர்கள் சந்திக்க சென்றதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் பால சுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறிநிலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்பாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் கடந்த மாதம் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்திப்பதற்காக சீமான் கரூர் சென்றுள்ளார். சீமானை சந்திக்க பொதுமக்களும் கூடியிருந்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூடியிருந்தனர். இந்த நிலையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News