உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2023-03-16 09:07 GMT   |   Update On 2023-03-16 09:07 GMT
  • மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
  • 5 பேரை கைது செய்து அவர்கிளிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி(43), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள்(38), அரசம்பட்டை சேர்ந்த ரமேஷ்(43) ஆகியோர் வீட்டின் அருகே சாராயம் விற்றதாக 3 பேரையும் காவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேல் சிறுவள்ளூர் (சாத்தனூர்) வலதுபுற கால்வாய் பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போதும் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கான்(51) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News