உள்ளூர் செய்திகள் (District)

கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

7 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை- கலெக்டர் வழங்கினார்

Published On 2022-12-26 08:20 GMT   |   Update On 2022-12-26 08:20 GMT
  • பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • ஒரு பயனாளிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சாந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு , கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1,70,000 மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டத்தை சார்ந்த 1மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொ கைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக நல அமைப்பாளி இளங்கோவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News