உள்ளூர் செய்திகள் (District)
நாகை விளையாட்டு மைதானத்தில் 74 வது குடியரசு தின விழா
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
- காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.