உள்ளூர் செய்திகள் (District)

9-ந்தேதி கிருஷ்ணகிரி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை

Published On 2022-08-06 08:32 GMT   |   Update On 2022-08-06 08:32 GMT
  • மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

ஓசூர்,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற செவ்வாய்கிழமை ( 9-ந் தேதி) கிருஷ்ணகிரி வருகிறார்.

மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

மேலும் இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா, ராஜி, மஞ்சுநாத், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம் ரெட்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சந்திரன், வட்ட செயலாளர் சங்கர் என்ற குபேரன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பகுதிகளின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News