உள்ளூர் செய்திகள்

தங்கராஜ், ஞானமலர்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 9 மாத குழந்தை கொலை: கைதான தாய்-கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு

Published On 2022-11-10 08:59 GMT   |   Update On 2022-11-10 08:59 GMT
  • தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது.
  • தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தை சோந்தவர் மாதேஷ் (வயது27). கூலி தொழிலாளி. இவருக்கும் ஞானமலர் (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பிரகாஷ் என்ற இரண்டரை வயது மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் ஞானமலருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ்(28) என்வருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் ஞானமலர் உல்லாச மாக இருந்து வந்தார்.

இது குறித்து மாதேசிற்கு தெரியவந்தது. தனது மனைவியின் நடத்தை குறித்து அறிந்த மாதேஷ், கடந்த 3-ம் தேதி மனைவி ஞானமலரை கண்டித்தார். மேலும், இனி கள்ளக்காதலை தொடரகூடாது என்று தனது மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர் இது குறித்து தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே, அவர்களை கொன்றுவிடலாம் என ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் போட்டு கொடுத்த திட்டத்தின்படி, ஞானமலர், தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

இதில் 2 குழந்தைகளும் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து தானும் குடித்துவிட்டதாக ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆதிரா கடந்த 5-ம் தேதி காலை இறந்தார்.

இது குறித்து குழந்தையின் தந்தை மாதேஷ், ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் இணைந்து குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்ததும், அதில் குழந்தை ஆதிரா இறந்ததும், மற்றொரு மகன் பிரபாஷ் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், தானும் விஷம் குடித்ததாக ஞானமலர் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கொன்ற தாய் ஞானமலர், தாயின் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ஞானமலரை சேலம் பெண்கள் சிறையிலும், தங்கராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

Similar News